எஸ்-லீக் காற்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்தத் தருணத்தில் எஸ் லீக் காற்பந்துப் போட்டிகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி நிறுவனமும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது வர்த்தக, வியாபார தளங்களில் எஸ்-லீக் காற்பந்தைப் பிரபலப்படுத்தும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் காற்பந்தின் முத்திரை அடையாளங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ் லீக் விளையாட்டாளர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றைத் தாங்கிய ரயில் பெட்டிகள் எம்ஆர்டி கிழக்கு=மேற்கு தடத்தில் பயணம் மேற்கொண்டன. இந்த ரயில் தடத்தில் இவை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதிவரை இடம்பெறும். அதேபோல், இம்மாதம் 18ஆம் தேதி முதல் காற்பந்து ஆட்டங்களின் சிறப்புத் தொகுப்புகள் எம்ஆர்டி ரயில் தளமேடைகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண்பிக்கப்படும்.