மெல்பர்ன்: கிருமிப் பரவலைக்
கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்து படிப்படியாக மாறி கிருமித்தொற்றுக்கு மத்தியில் வாழத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியாவில் நேற்று மேலும் 1,607 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர்.
இதில் விக்டோரியாவில் மட்டும் 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பல வாரங்களாக முடக்க நிலை நடப்பில் உள்ளது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் 70% தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று சொன்னார் மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ்.
ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு அக்டோபர் 26ஆம் தேதி ஆகக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
விக்டோரியாவில் இதுவரை 43 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்தில் நேற்று மேலும் 24 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அனைத்து தொற்று சம்பவங் களும் ஆக்லாந்தில் பதிவானவை.
கடந்த சில நாட்களாக குறைந்த தொற்று சம்பவங்களே பதிவாகி வந்த நிலையில், நேற்று அது சற்றே உயர்ந்தது.
எனவே சென்ற மாத மத்தியிலிருந்து தீவிர முடக்கநிலையில் உள்ள ஆக்லாந்து நகரில் கட்டுப்
பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்ததுள்ளது.
இது குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து அங்கு 3,700 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 27 பேர் மாண்டனர்.