வாஷிங்டன்: அமெரிக்காவில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 3வது தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
65 வயதைக் கடந்த முதியவர் களுக்கு கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் ஆகியிருந்தால் பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என்று உணவு, மருந்து நிர்வாகம் அனுமதி யளித்துள்ளது.
எளிதில் நோய்வாய்ப்படக் கூடியவர்களுக்கும் முன்னணி ஊழியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடவும் அது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் 3வது தடுப்பூசிக் குத் தகுதி பெற்றுள்ளனர்.
இருந்தாலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் (சிடிசி) அங்கீ காரம் வழங்க வேண்டும்.
இது குறித்து கலந்து பேச சிடிசியின் சுயேச்சைக் குழுக்கள் சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப் படும் எனத் தெரிகிறது.
நோயால் எளிதில் பாதிக்கப் படக்கூடியவர்கள் யார், எத்தகைய முன்னணி ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதி பெறுவார்கள் என்பது குறித்து குழு பரிந்துரைகளை வெளியிடும்.
"எங்களைப் பொறுத்தவரை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், ஆசிரியர்கள், பகல் நேர ஊழியர்கள், மளிகைக் கடை ஊழியர்கள், வீடற்றவர்கள் ஆகியோரை பட்டியலில் சேர்த்துள்ளோம்," என்று உணவு, மருந்து நிர்வாகம் தெரிவித்தது. முன்னதாக இம்மாதத்திலிருந்து பூஸ்டர் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருந்தார்.
அந்த உறுதிமொழிக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில் உணவு, மருந்து நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.