சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான சிங்கப்பூர் வல்லுநர் குழு இப்போது இது பற்றி ஆராய்ந்து வருகிறது என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
60, அதற்கும் அதிக வயதுள்ளவர்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்கள், நோய்த் தடுப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி முதலில் போடப்பட்டது.
அது 50 முதல் 59 வரை வயதுள்ளவர்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 237,000 பேர் ஏற்கெனவே பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது ஊக்கமூட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.