மதுரை: காவல்துறையையும் அரசு ஊழியா்களையும் தனது கைப்பாவை யாக வைத்துக்கொண்டு அதிமுக வினரை திமுக அரசு மிரட்டி வருவதாக எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமியும் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "அதிமுகவின் முன்னாள் அமைச் சர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
"பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஊராட்சிகள் எப்போதுமே அதிமுக வின் கோட்டையாக இருந்தவை. அந்தப் பகுதியில் அதிமுகவின் பெரும்பாக்கம் ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் தொடா்ந்து வெற்றிபெறுவது வழக்கம். அவா்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு இடங்களிலும் அதிமுகவினருக்கு திமுகவினர் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இந்த சலசலப்புக்கு எல்லாம் அதிமுகவினா் அஞ்சமாட்டாா்கள்," என்று தெரிவித்துள்ளனர்.