விலங்குகளின் பாதுகாவலன் என்று தம்மை சுயமாக அழைத் துக் கொள்ளும் ஒருவர், நாயை எட்டி உதைத்துத் துன்புறுத்திய விவகாரத்தில் சிக்கி தண்டிக்கப் பட்டுள்ளார். நேற்று அவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப் பட்டது. ஆலன் சியாம் சூன் சான், 41, தனது 'சைபிரியன் ஹஸ்கி' இன நாயை எட்டி உதைத்துக் குத்தியதை அண்டை வீட்டுக் காரர் ஒருவர் காணொளியாக படம்பிடித்திருந்தார். கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி ஜாலான் லோயாங் புசார் வீட்டில் இந்தச்சம்பவம் நடை பெற்றது. நீதிமன்றத்தில் பேசிய அரசு துணை வழக்கறிஞர் அஸ்ரி இம்ரான் டான், சம்பவத்தன்று அதிகாலை 7.00 மணி அளவில் அவரது நாய் வேதனையுடன் குரல் எழுப்பியதை அண்டை வீட்டுக்காரர் கேட்டதாகவும் அப்போது சியாம், நாயை எட்டி உதைத்ததை குடியிருப்பாளர் நேரில் பார்த்ததாகவும் கூறினார்.
கழுத்துப் பட்டையைப் பிடித்துத் தூக்கியதால் நாய்க்கு மூச்சுத் திணறியது. படம்: ஃபேஸ்புக்