ரோம்: பிரிட்டிஷ் அரசியார்
இரண்டாம்
எலிசபெத், 95, (படம்) நல்ல நிலையில் இருப் பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை அவருடன் உரையாடியதாகவும் சேனல் 4 செய்தியிடம் சனிக் கிழமை அவர் கூறினார். தாம் திட்டமிட்டிருந்த பயணங்களை எலிசபெத் அரசியார் திடீரென்று ரத்து செய்துவிட்டு உடல்நலக்குறைவு காரணமாக ஓர் இரவு மருத்துவமனையில் தங்கியதாகவும் கொவிட்-19 தொடர்பான உடல்நலக் குறைவு அவருக்கு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குைறந்த
பட்சம் இரு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறும் அதிகாரத்துவ வருகைகளைத் தவிர்க்குமாறும் அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.