செல்சி: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் செல்சி அணி அதன் முந்தைய நிர்வாகியான ஜோசெ மொரின்யோவுக்கு விடை கொடுத்த பிறகு தனது சொந்த மைதானமான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜில் விளையாடிய ஆட்டங் களில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் நேற்று நியூகாசலு டனான அதன் ஆட்டத்தில் இதை அப்படியே மாற்றிப்போட்டது அந்த அணி. நேற்றைய ஆட்டம் தொடங் கிய 20 நிமிடங்களில் மூன்று கோல்களை போட்டு அது நியூகாசலை ஓரங்கட்டியது.
அந்த கோல்களை செல்சி யின் டியேகோ கோஸ்டா, பெட்ரோ, வில்லியன் ஆகியோர் போட்டு செல்சி அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத் தினர். பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் பெட்ரோ, டிரயோரே ஆகியோர் மேலும் இரு கோல்கள் போட்டு இறுதியில் 5=1 என்ற வெற்றியைத் தேடித்தந்தனர். நேற்றைய வெற்றியின் மூலம் நாளை நடைபெறவுள்ள சாம்பி யன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மனை சந்திக்க தயாராக உள்ளதாக செல்சி பறை சாற்றின. "ஆட்டம் தொடங்கிய உடனேயே நியூகாசல் குழுவை ஆச்சரியத்துக்கு உள்ளாக்க நினைத்த எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதில் இரண்டு அற்புதமான கோல்கள் போட்டோம்.
ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்கள் எங்களது வெற்றியை உறுதி செய்தது," என்று பெருமிதத்துடன் கூறினார் செல்சியின் கூஸ் ஹிட்டிங். மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்ஹேம் குழு 2-2 என நார்விச் குழுவுடன் சமநிலை கண்டது.
நேற்று அதிகாலை செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி வீரர் பெட்ரோ தமது அணியின் நான்காவது கோலை போடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்