'ஜெய் பீம்' படம் வெளியானதில் இருந்து விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதனால் பெரும் மன உளைச்ச
லுக்கு ஆளாகி இருக்கிறார் சூர்யா.
படத்தின் சில காட்சிகளை மாற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா, ஜோதிகா உள்பட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் பரபரப்பு வழக்கு ஒன்றை பாதிக்கப்பட்ட தரப்பு
தாக்கல் செய்துள்ளது.
இவ்வாறு 'ஜெய் பீம்' விவகாரம் 'விடாது கருப்பாக' துரத்தி வருவதால் நடிகர் சூர்யா குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றுள்ளார்.
அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, மன நிம்மதி அடைந்த
பின்னரே அவர் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது.
துபாயில் இருந்து திரும்பி வந்ததும் வெற்றிமாறன், சிவா, ரவிக்
குமார் என சில இயக்குநர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் டிசம்பர் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தப் படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்க
இருந்த நிலையில் சூர்யா அந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தார். ஆனால், திடீரென்று கதையில் பாலா சில மாற்றங்களைச் செய்ததால் கதை சூர்யாவிற்குப் பிடித்துப்போனது. அதனால் அந்தப் படத்தை அவரே தயாரித்து, அதில் இரண்டு நாயகனாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார் சூர்யா.