டாக்கா: பங்ளாதேஷில் உயர்
நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் உட்பட பலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் டாக்காவின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நிலைகுத்தியது.
அப்போது மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமான குப்பை லாரி ஓட்டுநர் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அவர்கள் முழக்கமிட்டனர்.
2018ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தபோதும் மக்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டது.
ஆனால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அது போதுமானதாக இல்லை என்று கூறினர்.