லண்டன்: இங்கிலிஷ் கால்வாய் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளை பிரான்ஸ் திரும்பப் பெற வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சில் இருந்து இங்கிலிஷ் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 அகதிகள் உயிரிழந்ததையடுத்து ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரான்ஸ் அகதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதன் மூலம் உயிரைப் பணயம் வைத்து கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய முயல்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையும் என குறிப்பிட்டு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதன்மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றவும் முடியும் என்றார் அவர்.
அத்துடன் பிரான்சிலிருந்து அதிகமான படகுகள் வெளியேறு வதைத் தடுக்க கடல் ரோந்து பணியில் ரேடார் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வது, வான்வழி கண்காணிப்பு ஆகியவற்றிலும் பிரான்சுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, அகதிகள் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேலுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுக்கவில்லை.