தடைகளைத் தகர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விஷால் அச்சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருகிற மார்ச் 5ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஓர் அணி, கேயார் தலைமையில் ஓர் அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஓர் அணி, விஷால் தலைமையில் ஓர் அணி என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
விஷால் இடைநீக்க நடவடிக்கை காரணமாக அவரது அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.