நெடுந்தூர ஓட்ட வீரரான சோ ருய் யோங் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சிங்கப்பூர் திடல்தட மன்றத்தின் தகுதிச் சோதனையில் தேறியுள்ளார். இதனால், தங்கத்தைத் தக்க வைக்கும் அவரது எண்ணம் ஈடேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பானில் நேற்று நடந்த 'ககாவா மருகமே ஹாஃப் மெரத்தான்' போட்டியில் சோ பங்கேற்றார்.
42.195 கி.மீ. தூரம் கொண்ட இந்தப் பந்தயத்தை 1 மணி 12 நிமிடம் 30 வினாடி நேரத்திற்குள் கடந்தால் மட்டுமே அவரால் தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். இந்நிலையில், பந்தய தூரத்தை 1 மணி 7 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து, தென்கிழக்காசியப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார் 25 வயதான சோ.