போதைப்பொருள் புழங்கியதாக 17 வயது இளையரும் பிடிபட்டார்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய சோதனையில் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கை கிளமெண்டி, ஹவ்காங் மற்றும் பொங்கோல் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 8) முதல் வெள்ளிக்
கிழமை வரை நீடித்தது.
இவர்களில் 17 வயது சிங்கப்பூர் இளையரே ஆக வயதுகுறைந்தவர்.
போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின் பேரில் அவர் பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட அனை
வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $70,500க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
209 கிராம் ஹெராயின், 299 கிராம் ஐஸ், 733 கிராம் கஞ்சா, 10 கிராம் கெட்டமின் போன்றவை அவற்றுள் அடங்கும்.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக சிஎன்பி விளக்கியது.
அங் மோ கியோ ஸ்திரீட் 22 வட்டாரத்தில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது 59 வயது ஆடவர் புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 197 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக சிஎன்பி கூறியது.
அதன் பின்னர் அதே வட்டாரத்தில் அதே நாளில் 61 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் அவர் பிடிபட்டார்.
பின்னர் புதன்கிழமை மாலை பாலஸ்டியர் ரோட்டில் உள்ள ஓர் ஹோட்டலின் அறையில் சிஎன்பி அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் 27 வயது ஆடவரும் 23 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அதே ஹோட்டலில் மேலும் இரு ஆடவர்கள் பிடிபட்டனர். 24 மற்றும் 26 வயதுடைய அந்த இளையர்களின் வாகனங்களில் ரொக்கப் பணமும் போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை தொடர்வதாக சிஎன்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.