இந்தியாவில் கொவிட்-19 கிருமிப்பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது.
அக்டோபர் மாதத்துக்குப்பின் அன்றாடத் தொற்று எண்ணிக்கை சராசரியாக 20,000க்கு மேல் பதிவாகி வருகிறது. திங்கட்கிழமை ஒரே நாளில் 37,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓமிக்ரான் தொற்றும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 23 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவிவிட்டது. திங்கட்கிழமை இரவு வரை 1,892 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்டா, ஓமிக்ரான என பல்வேறு தொற்றுகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் புதிதாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இத்துடன், வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் திங்கட்கிழமை ஒரே நாளில் 5,481 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான ெகஜ்ரிவாலும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக நாடு முழுவதும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கொரோனா மூன்றாம் அலை உருவாவதற் கான அடையாளம் என கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நேற்று கூறினார்.
"இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதிவாகும் கொவிட்-19 சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஓமிக்ரான் தொற்று வகை. புதிய தொற்றுச் சம்பவங்கள் பெரு குவதால் உலகின் பல நாடுகளில் உருவானதைப் போன்ற மூன்றாவது தொற்று அலை இந்தியாவில் ஏற்படும் நிலை உள்ளது.
"இருப்பினும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை," என்றார் அவர்.