சிங்கப்பூரின் வாராந்திர கிருமிப் பரவல் விகிதம் நவம்பர் 12ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக 1க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் சமூக அளவில் பரவிய மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. கொவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளை அளவீடு செய்வதற்கு இந்தக் கணக்கீடு உதவுகிறது.
செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) இந்த வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 1.09 ஆகப் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் 842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 502 பேர் வெளி
நாடுகளில் இருந்து வந்தவர்கள். அன்றாடம் பதிவாகும் தொற்று களின் எண்ணிக்கை டிசம்பர் 30 முதல் அதிகரித்து வருகிறது.
வாராந்திர தொற்று விகிதம் 1க்கு மேல் இருந்தால் உள்ளூரில் பதிவாகும் வாராந்திர கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அர்த்தம்.
இதற்கு முன்னர் டிசம்பர் 24ஆம் தேதி இந்த விகிதம் ஆகக்குறைவாக 0.52 என பதிவாகி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு இது படிப்படியாக அதிகரித்து வருகிறது. வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதத்தைக் கணக்கிடும் வழக்கத்தை சுகாதார அமைச்சு 2021 அக்டோபரில் தொடங்கியது.
ஆகஸ்ட் மாத நிலவரம் அப்போது கணக்கிடப்பட்டது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி வாராந்தித் தொற்று விகிதம் ஆக அதி கமாக 3.01 என்று பதிவானது. டெல்டா கிருமி வகை அதிகமாகப் பரவியிருந்த நேரம் அது.
செப்டம்பர் மாதம் இந்த விகிதம் 2 ஆக இருந்தது. அது அந்த மாதத்தின் இறுதியிலிருந்து குறையத் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி 1க்குக் கீழ் இறங்கினாலும் மீண்டும் படிப்படியாக அது உயரத் தொடங்கியது.
இந்த விகிதம் 1க்குக் கீழ் குறையும்போது கொவிட்-19 கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவு தளர்வு அறிவிக்கப்படலாம் என்று அக்டோபர் 23ஆம் தேதி நடைெபற்ற கொவிட்-19க்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அக்குழுவின் இணைத் தலை
வரான லாரன்ஸ் வோங் கூறி இருந்தார்.
அந்த நாளில் 1.14 ஆக வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் இருந்தது. நவம்பர் 3ஆம் தேதி 0.96க்கு இறங்கிய அது, நவம்பர் 12ஆம் தேதி 1.04க்கு அதிகரித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் 1க்குக் கீழ் பதிவாகி வந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது.