சென்னை: மழைக்காலங்களில் சென்னையில் மழைநீர் பெருமளவில் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின்போது மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக வழக்கறிஞர் மணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக சென்னையில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் மழைநீர் வடிகாலுக்கு முறையான நடைமுறையை சென்னை மாநகராட்சி பின்பற்றாததே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.