சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆண்டு விழாவான முத்தமிழ் விழாவை ஒட்டி இவ்வாண்டும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டியுடன் கூடுதலாக இந்த ஆண்டு சிறப்பு அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சிறுகதைப்
போட்டிக்கான பரிசுகள்
முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200. மூன்று ஊக்கப் பரிசுகளுக்கு தலா $100 ரொக்கமும் வழங்கப்படும்.
இப்போட்டிக்கு கதைக்கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கூகல் டிரைவ் இணைப்பு: https://forms.gle/L1f7RtYEGeFHp1hf7
சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.
சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.
இப்போட்டிகளுக்கு எழுதப்படும் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலைத் தளமாகக் கொண்ட அறிவியல், வரலாற்றுக் கதைகளாக இருக்க வேண்டும்.
கதைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கூகல் டிரைவ் இணைப்பு: https://forms.gle/RC3eRz4kqGmFqnq28
எல்லாப் போட்டிகளுக்கும் கதைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதி நாள்: 20.03.2022
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டி முடிவுகள் ஏப்ரலில் நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் அறிவிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கத்தை 9675 3215 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.