ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இளம்பிறை இலக்கிய வட்டமும் நடத்தும் மாதாந்திர நிகழ்ச்சியான பேசும் கலை வளர்ப்போம் நிகழ்வு சென்ற 16ஆம் தேதி மெய்நிகர்வழி நடைபெற்றது.
அடித்தளத்தலைவர் மு.ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கவிஞர் க.து.மு. இக்பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தங்கமுனை விருது வென்ற திருமதி தமிழ்ச்செல்வி இராஜராஜன், 'தமிழோடு வாழ்வோம்; தமிழராய் வெல்வோம்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவர்கள் கிரிஷா, சனாகான், வியாசப்ரயன், மீரா ஜெயக்குமார், ஜீவந்திகா, கவிஞர் வேலம் புதுக்குடி பரீஜ், கார்த்திக் மகாதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசியும் பாடியும் நிகழ்ச்சியைச் சிறக்கச் செய்தனர்.