கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தலில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கைதான பாஜக பெண் தலைவர் ஜூகி சௌத்ரி, போலிசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது பற்றி மாநில காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் விளக்கினார். "குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்யப் பட்டுள்ள ஜூகி சௌத்ரியிடம் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நபர்கள் பற்றிய விவரங்களை இப்போது கூற முடியாது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யபட்டுள்ள சந்தான சக்கரவர்த்தி கூறிய தகவலுக்கும் ஜூகி சௌத்ரி கூறிய கருத்துக்கும் முரண்பாடு உள்ளது. எனவே, இருவரிடமும் ஒரே நேரத்திலும் தனித் தனியாகவும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் குழந்தை கடத்தலில் அரசியல்வாதிகள்
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!