சீனப் புத்தாண்டையொட்டிய மாபெரும் டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கு நாளை இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆங்பாவ் குலுக்கல் என்றழைக்கப்படும் இந்தக் குலுக்கலுக்கான முதல் பரிசுத் தொகை 12 மில்லியன் வெள்ளி என முதலில் கூறப்பட்டது. அது இப்போது 13.9 மில்லியன் வெள்ளியாகியுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் நாளை இரவு 9 மணி வரை விற்கப்படும்.
ஆங்பாவ் டோட்டோ டிக்கெட்டுகளை வாங்கி மாபெரும் பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் புக்கிட் மேரா வியூவில் நீண்ட வரிசை பிடித்து நிற்கும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்