நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் ஓர் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான 43 வயது ஹர்னிஷ் பட்டேல் சவுத் கரோலினாவில் அவரது வீட்டுக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிஸ் அதி காரிகள் கூறினர். சவுத் கரோலினா, லங்காஸ்டர் பகுதியில் கடை வைத்திருந்த ஹர்னிஷ் பட்டேல் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு ஒரு மினிவேனில் 6 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டுக்குப் புறப் பட்டிருக்கிறார். அவரது வீட்டுக்கு அருகே நள்ளிரவுக்குச் சில நிமிடங்கள் முன்னதாக பட்டேல் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் என்று போலிஸ் வட்டாரங்கள் கூறின. அன்று இரவு 11.33 மணியளவில் லங்காஸ்டர் போலிசாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற போலிசார் ரத்த வெள்ளத்தில் ஹர்னிஷ் பட்டேல் இறந்து கிடப்பதைப் பார்த்ததாக போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அமெரிக்காவில் மேலும் ஓர் இந்தியர் சுட்டுக்கொலை
5 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2017 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!