நியூயார்க்: உலகில் 20 மில்லி யனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக ஐநா தெரி வித்துள்ளது. குறிப்பாக ஏராள மான சிறுவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருக்கின் றனர். அவர்களுக்கு உடனடி உதவி வழங்கப்படவில்லை என்றால் பேரழிவு ஏற்படக்கூடும் என்று ஐநா அமைப்பு ஒன்று தெரிவித் துள்ளது. இந்த ஆண்டு 1.4 மில்லியன் சிறுவர்கள் பசி, பட்டினியால் உயிரிழக்கக்கூடும் என்று யுனிசெஃப் எனப்படும் குழந்தை களுக்கான ஐநா அமைப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக ஏமன், சோமாலியா, தெற்கு சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் பசி, பட்டினியால் அவதிப்படுவதாக ஐநா மனிதாபிமான அமைப்பின் தலைவர் ஸ்டீபன் ஓ பிரியன் கூறினார்.
ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஏமனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்