வில்சன் சைலஸ்
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பிரவாசி பாரதிய சமான்' விருதை சிங்கப்பூர் இந்தி யர் சங்கத்தின் சார்பாக பெற்றுக் கொண்டது திரு கேசவபாணிக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம். அதிலும் இந்திய அதிபர் பிரணாப் முக்கர்ஜியின் கரங்களிலிருந்து விருது பெற்றதில் பெருமிதம் கொள்கிறார் அவர். "சமூகத்தை ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழும் பல அமைப்பு களுள் ஒன்றான சிங்கப்பூர் இந் தியர் சங்கம் சிங்கப்பூருக்கு வரும் பலருக்கும் ஆதரவளிப்பதுடன் சமூக நலனிலும் அக்கறையுடன் செயல்படுகிறது," என்றார் சங்கத் தின் தலைவர் திரு கே. கேசவபாணி.
(இடமிருந்து) சிங்கப்பூரின் பொதுத் தூதர் திரு கோபிநாத் பிள்ளை, திருமதி சாந்தா பாஸ்கர், திரு என். புஷோத்தமன், இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ் சந்திரதாஸ், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ஆர் ஜெயசந்திரன், திரு கே. கேசவபாணி. படம்: திமத்தி டேவிட்