கொழும்பு: பதவி விலகிய இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே, 76, தமது குடும்பத்துடன் தலை
மறைவாகிவிட்டதாகச் செய்திகள் வெளிவந்து உள்ளன. அவரது வீட்டையும் ஆளுங்கட்சித் தலைவர்களின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
அதனைத் தொடர்ந்து குருனேகலா என்னும் இடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து ராஜபக்சே வெளியேறி விட்டதாகவும் ஆனால் அவர் எங்கே சென்றார் என்ற தகவல் இல்லை என்றும் கூறப்பட்டது.
அவரது இருப்பிடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தேடி வந்த நிலையில், அவர் வடகிழக்கு இலங்கை நகரான திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தில் பதுங்கியிருப் பதாகத் தகவல் வெளியானது.
அதனைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கானவர்கள் கடற்
படைத் தளத்துக்கு வெளியே திரண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக டெய்லி மிரர் கூறியது.
ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்கள் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிடாதவாறு கொழும்பு அனைத்துலக விமான நிலையம் செல்லும் வழியெங்கும் ஏராளமான எதிர்ப்பாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி விலகிய 9ஆம் தேதி இரவே ராஜபக்சே கொழும்பு நகரில் இருந்து திருகோணமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் தப்பிச்சென்றதாகவும் அதற்கு ராணுவம் உதவியதாகவும் தகவல்கள் கூறின. தப்பிச் செல்வதற்கான உதவிகளைச் செய்ய ராணுவத்துக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டது.
பாதுகாப்புக்காக அவர் கடற்
படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தற்காப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்னே தெரிவித்துள்ளார். "நிலைமை சீரானதும் விரும்பும் இடத்திற்கு மகிந்த ராஜபக்சே அழைத்துச் செல்லப்படுவார்," என்றார் அவர்.
மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. பம்பலப்பிட்டி காவல்துறை தலைமையகத்திலிருந்து இரு பெண்கள் ஹெலிகாப்டரில் ஏறுவதும் கொழும்பு ஷங்ரிலா ேஹாட்டலில் இருந்து மற்றொரு ஹெலிகாப்டர் புறப்படுவதும் சமூக ஊடகப் படங்களில் காணப்பட்டன.
முன்னதாக, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான 'டெம்பள் ட்ரீஸ்' மாளிகையில் ராஜபக்சே இருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
ராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர் களைக் கலைத்தனர். மக்களின் கொந்தளிப்பையும் ஆர்ப்பாட்டத்தை யும் அடக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியைத் தாங்க முடியாமல் மக்கள் போராட்டடத்தில் இறங்கினர். கடந்த சில வாரங்களாக நீடித்த போராட்டம் இவ்வாரத் தொடக்கத்தில் தீவிரமடைந்தது.
திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே: உறுதிப்படுத்திய அதிகாரி