கோலாலம்பூர்: வடகொரியாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்த 9 மலேசியர்கள் நேற்று பத்திரமாக கோலாலம்பூர் திரும் பினர். மலேசியாவுக்கும் வடகொரி யாவுக்கும் இடையே நிலவிய பூசலை முடிவுக்குக் கொண்டுவர அவ்விரு நாடுகளும் உடன்பாடு கண்டதைத் தொடர்ந்து பியோங் யாங்கில் சிக்கியிருந்த மலேசியர் கள் நாடு திரும்பினர். கோலாலம்பூர் வந்துசேர்ந்த மலேசிய தூதரக அதிகாரியும் அவர்களின் குடும்பத்தினரும் வடகொரியாவில் தாங்கள் எந்தத் தொல்லையையும் அனுபவிக்க வில்லை என்றுகூ றினர்.
பத்திரமாக நாடு திரும்ப உதவிய பிரதமர் நஜிப்பிற்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறினர். வட கொரியாவைவிட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தபோது வட கொரிய அதிகாரிகள் தங்களுக்கு தொல்லை எதுவும் கொடுக்க வில்லை என்றும் தங்கள் வாழ்க்கை வழக்கம் போலவே இருந்தது என்றும் மலேசிய தூதரக அதிகாரி முகம்மது நூர் அஸ்ரின் முகம்மது ஜயின் கூறினார்.