ஹைதராபாத்: இந்தியாவில் குடும்ப அரசியல் கூடவே கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக் கூறினார்.
குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு ஊழயல்மயமாகி உள்ளன என்பதையும் அவை ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டுமே எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளன என்பதையும் இந்தியா பார்த்துக்கொண்டுதான் வந்து இருக்கிறது என்று அவர் கூறினார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய திரு மோடி, குடும்ப அரசியல் கட்சி என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல என்றார்.
இந்திய ஜனநாயகத்தின், இளைஞர்களின் மிகப் பெரிய எதிரி அதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என்று திரு மோடி கூறினார்.
குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் தங்களுடைய வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கின்றன என்றும் அவை ஏழைகளைப் பற்றி கவலைப்படவே இல்லை என்றும் கூறினார்.
ஆட்சியைப் பிடித்து அதைத் தக்கவைத்துக்கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கவே அத்தகைய கட்சிகள் முயல்வதாக திரு மோடி கடுமை யாகக் குறிப்பிட்டார்.