செல்லப் பிராணிகளைத் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிப்பவர்களை நாம் பார்த்ததுண்டு.
அந்த வரிசையில் ஜப்பானியர் ஒருவருக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். நாயைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பது இவருடைய வாழ்நாள் கனவு. அந்தக் கனவு இப்போது நனவாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டோக்கோவுக்குப் பிடித்தமான நாய் கோலி (collie) வகையைச் சேர்ந்தது. இந்த நாயைப் போலவே இருக்கவேண்டும் என்பதில் அவருக்கு ஒரு வெறி. அதற்காக அவர் செலவளித்தது 2 மில்லியன் யென். அதாவது $21,612 வெள்ளி.
ஒரு நிறுவனத்துடன் இணைந்து கோலி நாய்போன்று ஆடையை வடிவமைத்தார். இப்போது நாய் ஆடை தயாராகி அவர் நாயைப் போலவே காட்சியளிக்கிறார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் உருமாறிய தன் புகைப்படங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அவருடைய பதிவை 1.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 18,000 முறை மற்றவர்களால் பகிரப்பட்டுள்ளது. படங்களைப் பார்த்தவர்கள் இது உண்மையிலேயே நாய் என்று நினைத்துவிட்டனர்.
அடுத்து என்ன? நாய் வேடம் போட்டால், குரைக்கத்தானே வேண்டும்.
நாய் வேடம் அணிந்து நாயை போலவே அவர் நடக்கும், உருளும், உட்காரும், பொம்மையுடன் விளையாடும் காணொளிகள் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதிசயத்தோடு காணொளிகளைப் பார்ப்பவர்கள், டோக்கோ எப்படி நாய் வேடத்தைப் போடுவார், எவ்வாறு சாப்பிடுவார், கழிவறைக்கு எப்படி செல்வார் என்று பல கேள்விகளைக் கேட்கின்றனர்.