'என்னை அறிந்தால்', 'மீகாமன்', 'நானும் ரவுடிதான்', 'கதகளி' உள்பட பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. அதை யடுத்து 'பண்டிகை', 'என்னோடு விளையாடு', 'தெறி' போன்ற படங்களில் நடித்து வரும் அவர், 'கதகளி'க்குப் பிறகு 'மோர் மிளகா', 'மானிடன்' போன்ற புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுபற்றி ஆத்மா கூறு கையில், "கதகளி' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத் தது. அதன் காரணமாகத் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவில் இருந்தும் எனக்குப் படவாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் தமிழைப் பொறுத்த வரை விக்னேஷ் நடித்துள்ள 'அவன் அவள்' படத்தை இயக்கியுள்ள ரமேஷ் மிர்னாலி அடுத்து இயக்கும் 'மோர் மிளகா' படத்தில் தாதா வேடத் தில் நடிக்கிறேன். துபாயில் நடக்கும் கதை இது. தீவிரவாதம் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில், நாயகர்களாக நடிக்கும் தமிழ், -மோகன் ஆகியோரை ஆட்டிப் படைக்கும் அதிரடி வில்லனாக நடிக்கிறேன்.
'மோர் மிளகா' படத்தில் தாதா வேடத்தில் நடிக்கும் ஆத்மா.