பெய்ஜிங்: கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் அவதியுறும் வேளையில் சீனா கூடுதலாக 7.5 மில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால மனிதநேய உதவியை வழங்கவிருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சு நேற்று இந்தத் தகவலை வெளியிட்டது.
தற்காலிகப் படுக்கைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் நாளை விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சீனா அனுப்பிய உணவுப் பொருள்கள் ஆப்கானிஸ்தானில் விநியோகிக்கப்படுகின்றன.
சென்ற புதன்கிழமை அங்கு ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.