‘கிழக்கு மலேசிய உல்லாசத் தளங்களை தவிர்க்க வேண்டும்’

லண்டன்: ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டனும் கிழக்கு மலேசிய மாநிலமான சாபாவின் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தமது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பிலிப்பீன்ஸ் எல்லையோரம் அமைந்த சாபா மாநிலத்தில் வெளிநாட்டவர்களைக் கடத்தும் பயங்கரவாதிகளின் மிரட்டல் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அந்தத் தீவுக்கான பயங் கரவாத மிரட்டல் பொது என்ற நிலையிலிருந்து உச்ச நிலைக்கு பிரிட்டன் உயர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் அலு வலகம், அவசியமான பயணத் தைத் தவிர மற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தது. தெற்கு பிலிப்பீன்சில் செயல்படும் குழுக்களின் கடத்தல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

அவற்றில் சில சாபா கடலோரப் பகுதிகளில் ஆட்களைக் கடத்தும் ஆற்றல் பெற்றவை என்று அலுவலகம் குறிப்பிட்டது. ஏற்கெனவே தீவுகள், சுற்றுப் பயண வசதிகள் உட்பட கிழக்கு சாபாவின் கடலோரப் பகுதிகளின் உல்லாசத் தளங்களுக்கு பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தமது குடிமக்களை ஆஸ் திரேலியா எச்சரித்திருந்தது. நியூசிலாந்து, இத்தகைய பயணம் மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளது. ஆனால் இதுவரை மலேசியாவுக்கு எதிராக அமெரிக்க எந்தவித பயணக் கட்டுப்பாடும் விதிக்க வில்லை.

சாபாவில் உள்ள போம் போம் தீவு உல்லாசத் தளங்கள். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!