பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பன் இண்டர்நேஷனல் டென்னிஸ் போட்டி நடை பெற்றது. நேற்று முன்தினம் நடை பெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இடத் தில் இருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி (படம்), ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்ஜலிக்யூ கெர்பர் - அன்ட்ரியா பெட்கோ விக் ஜோடியை எதிர்த்து விளை யாடியது. முதல் செட்டில் அனுபவம் வாய்ந்த சானியா ஜோடிக்கு ஜெர்மனி ஜோடி கடும் சவால் விடுத்தது.
இறுதியில் கடும் முயற்சிக்குப்பின் சானியா ஜோடி 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது. ஆனால், 2வது செட்டில் சானியா ஜோடி நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த செட்டை 6-1 என எளிதில் வென்று 2-0 என நேட்செட்டில் வெற்றி பெற்று வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.