காட்டுத்தீ: அல்ஜீரியாவில் குறைந்தது 37 பேர் மரணம்

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 37 பேர் இறந்துவிட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை அதிகாலையில் இருந்து வடகிழக்கிலுள்ள 21 மாநிலங்களில் குறைந்தது 118 இடங்களில் தீப்பிடித்து எரிந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 2,590 ஹெக்டர் எரிந்துவிட்டது; 300க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறினர். வியாழக்கிழமைக்குள் தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மீட்புப் பணிகள் நடந்துவருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே, நாட்டின் கிழக்குப் பகுதியில் வெப்பநிலை 47.1 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என்று அல்ஜீரிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. (படத்தில்) தமது பண்ணையில் இருந்த விலங்குகள் தீயில் மடிந்ததால் கவலையுடன் காணப்படுகிறார் இந்தப் பண்ணையாளர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!