அனந்தபூர்: ஆந்திராவில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியாயினர். இரண்டு பேர் இன்னமும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனந்தபூரில் உள்ள எர்ராட் டியம்மா ராஜூ ஆற்றில் படகு மூழ்கியது. இதையடுத்து அதில் பயணம் செய்த 13 பேர் மாண் டனர். அவர்களில் ஏழு பேர் பெண்கள். ஆறு பேர் குழந்தைகள். வெள்ளிக்கிழமை அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் படகில் உல்லாச பயணம் சென்ற போது விபத்து நிகழ்ந்தது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் மூழ்கியவர் களை மீட்கும் பணியில் இறங் கினர்.
ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 13 பேர் மாண்டனர். இதனால் உறவினர்கள் பலர் கதறி அழுகின்றனர். படம்: ஏஎஃப்பி