இந்திய, மலாய் இனத்தவர்களிடம் நீரிழிவு நோய் கட்டுப்பாடு மோசமாக இருக்கும் ஆபத்து உள்ளதையும் ஆய்வு காட்டுகிறது. புதிதாக அடையாளம் காணப்பட்ட டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள் ஆரம்பத்தில் தங்களது உடல்நிலையை நன்கு கவனித்தாலும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அவர்களிடம் நோய் பராமரிப்பு குறைந்து விடுவதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்சுலின் மருந்தைத் தொடர்ந்து எடுக்கும் பழக்கம் பலருக்கு இல்லாதது இதற்குக் காரண மாக இருக்கலாம் என்று சிங் ஹெல்த் பலதுறை மருந்தகங் களின் ஆய்வுப் பிரிவுக்கான இயக்குநர் டாக்டர் டான் நியாம் சுவான் தெரிவித்தார்.
டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க மருந்தையே சார்ந்துள்ளனர். எனினும் காலப்போக் கில் மருந்தினால் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலையை பலர் எட்டுகின்றனர். அப்போது இன்சுலின் தேவைப் படுகிறது. "இன்சுலின் பயன்படுத்தத் தொடங்கினால் அதோடு தங்கள் வாழ்க்கையே முடிந்து விடுவதாக பலர் கருதுகின்றனர். உண்மையில் நீரிழிவு நோய் சிகிச்சையில் இன்சுலின் ஒரு பகுதியாக உள்ளது," என்றார் டாக்டர் டான்.