ஆண்டுதோறும் கவிமாலை அமைப்பு மூன்று நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சிறந்த கவிதை நூலுக்கு 'வெண்பாசிற்பி' இக்குவனம் அவர்களின் நினைவாக அவருடைய மகன் மருத்துவர் சாமிநாதன் இல்லத்தார் தங்கப்பதக்கம் ஒன்றைக் கொடுத்துக் கவிஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் இவ்வாண்டும் ஒரு சிறந்த கவிதை நூலுக்குத் தங்கப்பதக்கம் வழங்க கவிமாலை தயாராகியுள்ளது.
2021ஆம் ஆண்டு
(01.01.2021 - 31.12.2021) அச்சிட்டு வெளியான கவிதை நூல்களைச் சிங்கப்பூர் கவிஞர்களிடமிருந்து கவிமாலை வரவேற்கிறது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்த வாசிகள் மற்றும் சிங்கப்பூரில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் போட்டி யில் கலந்துகொள்ள தகுதி படைத்தவர்கள் ஆவர். கவிதைகள் எந்தப் பாவினத்தையும் சேர்ந்தவையாக இருக்கலாம். கவிஞர்கள் தங்கள் கவிதைப் படைப்பை 2022 அக்டோபர் மாதம் 12ஆம் தேதிக்குள் நேரிலோ/
அஞ்சல் அல்லது கொரியர் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
கட்டணம் இலவசம்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
பரிசுபெறும் நூலுக்கானத்
தங்கப்பதக்கம் நவம்பர் மாதம் கவிமாலை நடத்தவிருக்கும் விழாவில் வழங்கப்படும். நூல்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: கவிமாலையின் காப்பாளர்
மா. அன்பழகன் புளோக் 9 #07-30 சிலிகி சாலை, சிங்கப்பூர் 180009.
தொலைபேசி: 90053043