சென்னை: சிகரெட்டால் சூடுவைத்து ஓர் இரண்டு வயது சிறுமியைத் துன்புறுத்திய தாயையும் அவரின் காதலரையும் காவல்துறையினர் பிடித்துவைத்துள்ளனர்.
அச்சம்பவம் வியாழக்கிழமையன்று (29 செப்டம்பர்) சென்னையின் சாஸ்திரி நகர் பகுதியில் நிகழ்ந்தது.
குழந்தையின் தாயான 28 வயது பானு மூவாண்டுகளுக்கு முன்பு விமல்ராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பாதிக்கப்பட்ட குழந்தையான ஏஞ்சல் அவர்களுக்குப் பிறந்தவர்.
பிறகு கணவரைவிட்டுப் பிரிந்த பானு, ஜெகன் என்பவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டார்.
அதே பகுதியில் வசித்த ஜெகனுடன் பானு தனது மகளுடன் வாழ ஆரம்பித்தார்.
வியாழக்கிழமையன்று தனது மகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக பானு தனது தாய் கன்னியம்மாளிடம் கூறியிருக்கிறார்.
கன்னியம்மாள் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அப்போது குழந்தையின் முகத்திலும் உடலிலும் தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் சாஸ்திரி நகர் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் பானுவையும் அவரின் காதலரையும் காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
மது அறுந்திய போதெல்லாம் தானும் தனது காதலரும் குழந்தையைத் துன்புறுத்தியதாக பானு காவல்துறையினரிடம் தெரிவ்த்தார்.