லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் நேற்றிரவு தோற்
கடித்தது.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஆர்சனலுக்காக அருமையான கோலை பார்ட்டே போட்டார்.
ஆனால் ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ஸ்பர்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை ஹேரி கேன் நழுவவிடவில்லை. அவர் அனுப்பிய பந்து வலையைத் தொட, ஆட்டத்தை ஸ்பர்ஸ் சமப்
படுத்தியது.
இடைவேளையின்போது இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன.
பிற்பாதி ஆட்டம் ஸ்பர்சுக்கு ஒரு கெட்ட கனவாகவே அமைந்தது.
ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் கோல்காப்பாளருக்கும் தற்காப்பு ஆட்டக்காரருக்கும் இடையே குழப்பம் ஏற்பட ஆர்
சனல் இரண்டாவது கோல் போட்டது. 62வது நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக ஸ்பர்சின் எமர்சன் ராயலுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ஐந்து நிமிடங்கள் கழித்து, ஆர்சனலின் மூன்றாவது கோலை ஸாக்கா போட்டார்.