அனுஷா செல்வமணி
பெண் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தனது வளாகத்தில் தீபாவளி சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.
தீபாவளி ஒளியூட்டுக்காக குத்துவிளக்கேற்றி சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் 37 வெவ்வேறு தொழில்முனைவர்கள் சங்கத்தின் தரைத்தளத்தில் தங்களின் சிறிய கடைகளை அமைத்து வாடிக்கையாளர்களை வரவேற்றார்கள்.
கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆடைகள், பலகாரங்கள், அணிகலன்கள், வாசனைத் திரவியங்கள் போன்ற பொருள்கள் கடந்த சனிக்கிழமையும் நேற்றும் விற்கப்பட்டன.
"என்னைப் போல் இணையத்தில் வர்த்தகங்களை நடத்தி வரும் பெண்களுக்கு இந்த முயற்சி ஒரு சிறந்த தளமாக அமைகிறது. என் வணிகத்தைப் பற்றி பெரிதும் கேள்விப்படாதவர்கள், இந்தச் சந்தைக்கு வந்து நான் விற்கும் பலகாரங்களை வாங்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும், பெண்கள் ஒன்றிணையும்போது நாங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்து எங்கள் வணிகத்தை மேம்படுத்திக்கொள்கிறோம்," என்று பகிர்ந்தார் ஸ்வீட் & சேசி Pte Ltd (Sweet & Sassy) நிறுவனத்தை நடத்தும் திருமதி சந்தியா, 46.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பார்த்திபன் முருகையன் தம் துணைவியாரோடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
சங்க உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவி திருமதி ஜெயந்தி மணியன், 51, "நோய்த்தொற்று கார ணமாக பாதிக்கப்பட்ட வர்த்தங் களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் சங்கத்தின் மகளிர் பிரிவு தீபாவளிச் சந்தைக்கு ஏற்பாடு செய்தது," என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துக்கொண்டார்.
வாரயிறுதியின் இரண்டு நாள்களுக்கும் சந்தையில் வாடிக்கையாளர்கள் திரண்டு அமோக ஆதர வளித்ததைப் பார்க்கும்போது, பெண்களுக்கு உதவும் வகையில் மேலும் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய எங்கள் மகளிர் பிரிவு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.