மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தேநீர் கடைகளைக் குறிவைத்து கரடிகள் கன்னமிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அந்தப் பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருக்கிறர்கள்.
அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் உணவு தேடி வரும் கரடிகள், குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து வீடுகள், கடைகளுக்குள் நுழைந்து சூறையாடி வருகின்றன.
அந்தப் பகுதியில் கண்டி என்ற ஊரில் செயல்படும் சசி என்பவரின் தேநீர் கடையில் இரவு நேரத்தில் கதவை உடைத்து புகுந்த ஒரு கரடி, தேநீரோ, உணவோ எதுவும் இல்லாமல் போனதையடுத்து கடை முழுவதும் சூறையாடியது.
கரடி, கடையில் இருந்த 100க்கும் மேற்பட்ட முட்டைகளை உடைத்து குடித்துவிட்டு கடையை அலங்கோலப்படுத்திவிட்டு சென்றுவிட்டது.
காலையில் வந்து கடையைப் பார்த்து திடுக்கிட்ட சசி, அது பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதிகாரிகள் கண்காணிப் பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.