'கொவிட்-19 மீண்டும் உறுதிசெய்யப்பட்டதாக 357 பேருக்கு தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம்'

ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 357 நோயாளிகளுக்கு, மீண்டும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் குறுஞ்செய்தி கடந்த சனிக்கிழமை (மே 16) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவறுதலாக அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப பரிசோதனையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு நேர்ந்ததாக அமைச்சு தெரிவித்தது. அந்தக் குறுஞ்செய்தியைத் தவறுதலாகப் பெற்ற அனைவருக்கும், நிகழ்ந்த தவறை விவரித்து, மன்னிப்புக்கோரி அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக மாற்று தகவல் அனுப்பப்பட்டது.

சிஎன்ஏ பதிவேற்றப்பட்டிருந்த அந்தக் குறுந்தகவலின் படம் ஒன்றைக் குறிப்பிட்டு அமைச்சு இந்த விளக்கத்தை அளித்தது. அந்தப் படத்தில் இருந்த தகவலில், முகக்கவசம் அணிந்து தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களது ‘டிரேஸ் டுகதெர்’ தகவலைப் பதிவேற்றுமாறும் மருத்துவரின் ஆலோசனை பெறுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!