ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 357 நோயாளிகளுக்கு, மீண்டும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் குறுஞ்செய்தி கடந்த சனிக்கிழமை (மே 16) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவறுதலாக அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப பரிசோதனையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு நேர்ந்ததாக அமைச்சு தெரிவித்தது. அந்தக் குறுஞ்செய்தியைத் தவறுதலாகப் பெற்ற அனைவருக்கும், நிகழ்ந்த தவறை விவரித்து, மன்னிப்புக்கோரி அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக மாற்று தகவல் அனுப்பப்பட்டது.
சிஎன்ஏ பதிவேற்றப்பட்டிருந்த அந்தக் குறுந்தகவலின் படம் ஒன்றைக் குறிப்பிட்டு அமைச்சு இந்த விளக்கத்தை அளித்தது. அந்தப் படத்தில் இருந்த தகவலில், முகக்கவசம் அணிந்து தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களது ‘டிரேஸ் டுகதெர்’ தகவலைப் பதிவேற்றுமாறும் மருத்துவரின் ஆலோசனை பெறுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online