அக்கம்பக்கக் குடியிருப்பாளர்களுடன் கைகோத்து வலைப்பந்து போட்டியில் பங்கேற்கவும் பால்ய நண்பர்களுடன் தனியொருவராக டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளவும் தீவு முழுவதும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ள சமூக விளை யாட்டுப்போட்டிகள் கைகொடுக்க விருக்கின்றன. இம்மாதம் முதல் டிசம்பர் வரை யில் வசிப்போர் குழுக்கள்/ அக் கம்பக்க குழுக்களின் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெறும். குடியிருப்பாளர்கள் துடிப்புடன் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் விளையாட்டுப் போட்டி களிலும் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
சிங்கப்பூர் சமூக விளையாட்டு களின் ஓர் அங்கமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளின் மூலம் தேசிய அளவிலும் பெயர் பதிக்க முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்கள் கழகமும் சமூக விளை யாட்டு மன்றமும் ஏற்பாடு செய் துள்ள சிங்கப்பூர் சமூக விளை யாட்டை செங்காங் சமூக மன்றத் தில் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்பில் பேசிய சமூக விளையாட்டு மன்றத்தின் தலைவர் லாரன்ஸ் இங், "குடியிருப்பாளர் களை ஒன்றிணைக்கும் சிறந்த வழியாக சிங்கப்பூர் சமூக விளை யாட்டுகள் திகழும்," என்றார்.
சமூக விளையாட்டுப் போட்டியை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் சிறுவர்களின் காற் பந்தாட்டத்தைப் பார்வையிடுகிறார். படம்: பெரித்தா ஹரியான்