ஜிஎஸ்டி மோசடிக் குற்றம்: $190,000 அபராதம்

ஆயிரக்கணக்கான ஆடம்பரப் பொருட்களுக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டுவதைத் தவிர்த்த குற்றத்திற்காக பிரபல கைப்பை சில்லறை வர்த்தகருக்கு $190,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50,000 வெள்ளி மதிப்புள்ள ஜிஎஸ்டி கட்ட அவர் தவறினார். யு சுங் டான், 47, என்பவர் லவ்தபேக் என்னும் நிறுவனத்தின் பங்கு தாரர்.

கடந்த 2011 அக்டோபர் முதல் 2013 அக்டோபர் வரை பிரபல நிறுவனங்களின் 2,338 கைப்பைகளை அவர் இறக்குமதி செய்ததாகவும் அஞ்சல் வழியாக அவற்றை 41 சம்பவங்களில் அவர் பெற்றதாகவும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கட்டுவதைத் தவிர்க் கும் நோக்கில் இறக்குமதி ஆவ ணங்களில் அந்தக் கைப்பைகளின் மதிப்பை 400 வெள்ளிக்குக் குறைவாகக் குறிப்பிடும்படி கைப்பை விற்பனையாளர்களை அவர் கேட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரி வித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!