முஹம்மது ஃபைரோஸ்
செய்திகளிலும் தேசிய சடங்குபூர்வ நிகழ்வுகளிலும் Aides= de=camp (ஏடிசி) எனப்படும் அதிபரின் அந்தரங்க உதவி யாளர்களை இஸ்தானாவில் பார்க்க முடியும். அவர்கள் சிங்கப்பூர் அதிபர், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் பக்கத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கௌரவ பொறுப்பு மூத்த போலிஸ் அதிகாரியான உதவி சுப்ரின் டென்டண்ட் (ஏஎஸ்பி) நரேஷ் சிவயானத்திற்கு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் போலிஸ் படையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இவர், தற்போது ஜூரோங் போலிஸ் பிரிவில் 'மக்களுக்கு எதிரான வன்முறை' தடுப்புக் குழுவில் அதிகாரியாக உள்ளார். இஸ்தானாவில் நேற்று நடந் தேறிய பதவியேற்பு நிகழ்ச்சியில் இவரை அதிபர் டோனி டான் கெங் யாங் தமது கௌரவ உதவி யாளர்களில் ஒருவராக நியமித்தார்.
அதிபரின் 'ஏடிசி' அதிகாரி ஏஎஸ்பி நரேஷ் அவரது மனைவி திருமதி ஷ்ரடா மேனன். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை