ஊழியர் ஒருவரின் வேலைநீக்கம் தவிர்க்க முடியாதது என்ற நிலையில் நிறுவனங்கள் அதைப் பொறுப்பான, உணர்வுபூர்வமான முறையில் கையாள்வதற்கு மனித வள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகி யவை இணைந்து முத்தரப்பு வழி காட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளன. நிறுவனங்கள் வலுவான சிங் கப்பூர் ஊழியர் மையத்தை வைத் திருக்கவும் வேலை இழந்த ஊழியர்களுக்கு உதவி செய்யும் வழிகளைக் கண்டறியவும் இந்த மாற்றங்கள் வலியுறுத்துவதாகக் அவை வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
"வர்த்தகங்கள் சீரமைக்கப் படும்போது அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் கையாள ஊழியர் களின் திறன்களை மேம்படுத்து வது, வேலைகளை மறுவடிமைப்பது போன்ற மாற்று வழிகளைப் பரி சீலிக்க வேண்டும் என்று கூட்டறிக்கை கூறியது. வேலை நீக்க சலுகைகளைப் பெறுவதற்கு ஊழியரின் பணிக் காலம் மூன்றாண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.