நைக்கி நிறுவனத்தில் பொருட்களைக் காட்சிப்படுத்தும் மேலாளராகப் பணியாற்றி வந்த ஜொவான்னெ சியோங் சூக் யின் $77,000 மதிப்பிலான செலவினங்களை முறையானவை என்று பொய் கூறி ஏமாற்றியதற்காக அவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தன்னிச்சையாக பகுதிநேரப் பணிபுரிந்து வரும் அவர், நிறுவனத்தையும் ஊழியர்களையும் ஏமாற்றிய 22 குற்றச் சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அத்தகைய மேலும் 132 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. நைக்கி நிறுவனத்துக்கு வடிவமைப்புச் சேவை வழங்கிய மூன்று ஊழியர்கள் 'டி3' நிறுவனத்தைச் சேர்ந்த தற்காலிக ஊழி யர்கள். அந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், வேறு செலவினங்களுக்கான தொகை யை நைக்கி நிறுவனத்திடமிருந்து 'டி3' பெற்றுக்கொள்வது வழக்க மாக இருந்தது.