சிங்கப்பூரில் மின்படிகளுக்கும் மின்தூக்கிகளுக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை கட்டட, கட்டுமான ஆணையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக் கப்பட்டுள்ள இந்தப் புதிய விதி முறைகளின்கீழ் மின்படிகள் குறைந்தபட்சம் மாதம் ஒரு தடவையாவது பராமரிக்கப்பட வேண்டும். முன்னர் அறிவிக்கப் பட்ட கடுமையான மின்தூக்கி விதிமுறைகள் தொடர்பான விவ ரங்களையும் ஆணையம் நேற்று வெளியிட்டது.
வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலுள்ள அனைத்து மின்படிகளின் உரிமையாளர்களும் மாதாந்தரப் பராமரிப்புக்காக பதிவு செய்யப் பட்ட குத்தகையாளரை அமர்த்திக் கொள்வது கட்டாயமாகும். அவ்வாறு அமர்த்தப்படும் குத்தகையாளர்கள் குறிப்பிட்ட பத்துவிதமான பராமரிப்புச் சோதனைகளை திருப்திகரமான முறையில் செய்ய வேண்டும். பாது காப்பு விசைகள், உணர்கருவிகள், மின்படிகளின் கைப்பிடிகள், அவசரகால விசை போன்றவை உள்ளிட்ட சோதனைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.