தீவிரவாத சிந்தனையைப் போதித்து மற்றவரை வன்செயலில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும் தனி நபர்கள், நேரடியாக வன்செயலில் ஈடுபடுவோர் அல்லது கொலை செய்வோரைவிட ஆபத்தானவர் கள் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள் ளார். இத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் ஆபத்தான வர்கள் என்றும் தீய தாக்கத்தைக் கொண்டவர்கள் என்றும் வர் ணித்த அமைச்சர் சண்முகம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இம்மாதம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஸுல்ஃபிக் கர் முகம்மது ஷரிஃப், 44, சாதா ரண மக்களைப் பயங்கரவாதிக ளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தால் அவரும் அப்படிப்பட்டவர் தான் என்றார்.
"அவர் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்களைத் திசைதிருப்பி, ஜனநாயக நாட்டை அவர்கள் கைவிட்டு இஸ்லாமிய கொள்கையு டைய நாட்டைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்," என்றார் அமைச்சர். சிங்கப்பூரர்களான 29 வயது முகம்மது ஷமின் முகம்மது சிடெக் என்ற பாதுகாவலரையும் தடை ஆணை பெற்ற வர்த்தகரான 33 வயது முகம்மது சயிதின் அப் துல்லா என்பவரையும் வெற்றிகர மாக தீவிரவாத சிந்தனையாளர் களாக மாற்றினார் ஸுல்ஃபிக்கர். சமூகச் சீர்திருத்தம் மூலம் ஒரு நல்ல காரியத்துக்காகக் குரல் கொடுப்பதற்கும் சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் போர்வைக்குக் கீழ் பயங்கரவாதத் தைப் பெருமைப்படுத்துவதற்கும் தெளிவான வேறுபாடு உள்ளது என்றும் அமைச்சர் சண்முகம் சுட்டினார்.
ஈராக், சிரியா ஆகியவற்றில் இயங்கிவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங் கரவாத அமைப்பின் செயல் களுக்கு ஆதரவாக சமூக வலைத் தளங்களில் பல்வேறு பதிவுகளை சுல்ஃபிக்கர் செய்துள்ளார். "மக்களைத் தீவிரவாதச் சிந்த னைகள் கொண்டவர்களாக மாற்று வது, வெளிநாடுகளில் சென்று போரிட ஆள்பலத்தைச் சேர்ப்பது, ஐஸ்ஐஸ் அமைப்பைப் பெருமைப் படுத்துவது, சிங்கப்பூரில் இஸ்லா மிய அரசு இருக்கவேண்டும் என சொல்வது-=இவை நம்மைப் பொருத்தவரை எல்லை மீறிய செயல்களாகும்," என்று அமைச்சர் சண்முகம் விவரித்தார்.