சமூக உண்டியலுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனமும் எஸ்பிஎச் அறநிறுவனமும் இணைந்து சமூக உண்டியலுக்கு $350,000 வழங்கியுள்ளது. இதன் தொடர்பான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று எஸ்பிஎச் நியூஸ் செண்டரில் நடைபெற்றது. இந்தத் தொகையிலிருந்து $150,000 வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உடற்குறையுள்ள, சிறப்பு தேவைகளுடைய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கல்வி உதவி நிதிக்கு வழங்கப்படும். மீதமுள்ள $200,000 தொகையிலிருந்து $100,000, முதியோர் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சேவையாற்றும் 10 அறக்கட்டளைக்கு வழங்கப்படும். எஞ்சிய $100,000 வசதிகுறைந்த உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கான 10 அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும். எஸ்பிஎச் நிறுவனம் எஸ்பிஎச் அறநிறுவனம் ஆகியவற்றின் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் சிறப்பு விருந்தினராக நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் 300 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!