சிலேத்தார் விமான நிலையத்தில் 2018 முடிவு வாக்கில் புதிய இரண்டுமாடி பயணிகள் முனை யம் கட்டப்படும். அது ஆண்டுக்கு 700,000 பயணிகளைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையம் திறக்கப் பட்டதும் இப்போதைய முனையம் இடித்து தள்ளப்படும் என்று அந்தப் புதிய முனையத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சியில் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. சிலேத்தார் விமான நிலை யத்தைப் புதுப்பிக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அந்தத் திட்டத் தின் அடுத்த கட்டமாக இந்தப் புதிய $50 மில்லியன் முனையம் கட்டப்படும். புதிய முனையம் திறக்கப்பட்ட தும் சிறு விமானங்கள் அந்த முனையத்திலிருந்து சேவையாற் றத் தொடங்கும்.
புதிய சிலேத்தார் விமான நிலையத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடமிருந்து 2வது) உள்ளிட்ட பல பேராளர்களும் அதில் கலந்துகொண்டு முனையத் தின் வடிவத்தைப் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்